போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
Aug 15, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பதில் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முந்திரிக் கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளகரை ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், கொடுக்கம்பாளையம், பெத்தாங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக முந்திரி விவசாயம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள முந்திரி மரங்களை அழித்து, அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

அங்குத் தோல் தொழிற்சாலை அமைய உள்ளதாக அப்பகுதி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், முந்திரி மரங்களை அகற்றிய அதே பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது அவர்களை, கடலூர் மாவட்ட கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதே இடத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: கடலூர்Farmers and Marxist Communist Party members involved in the protest arrested!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒருவர் காயம்!

Next Post

2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல்!

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies