ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெத்தாபுரத்தில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த காமேஸ்வரர், 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த பொதுமக்கள் காமேஸ்வரரை சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.