இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோலி சோடா ஏராளமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன் ருசிக்கு மக்கள் அனைவரும் அடிமையாகிவிட்டனர்.
இதன் காரணமாகக் கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் மசுவு அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.