ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!
Jan 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் இணைக்கப்பட்டதே  இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒருநாடு மற்றொரு நாடு  மீது போர் தொடுக்கும் போது ஆயுதங்களை விட முக்கியமானவை வியூகங்களே. மன்னர் காலத்தில் இருந்தே தங்களின் போர் வியூகங்களை எல்லா நாடுகளும் ரகசியமாக வைத்திருக்கும்.  இது தான். அவ்வளவு முக்கியமான ஒன்றை, தங்களது அலட்சியத்தால் கோட்டை விட்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஈரானின் ஆதரவு பெற்ற இந்த கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக, செங்கடலில் செல்லும் இராணுவம் மற்றும் வணிக கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து ஏமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள், தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் Jeffrey Goldberg தெரிவித்துள்ளார். எப்படி ஏமன் மீதான தாக்குதல் பற்றிய  இராணுவ ரகசியம் கசிந்தது என்பது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களுக்குள் அதிமுக்கிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள சிக்னல் என்னும் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த குழுவில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, CIA இயக்குனர் ஜான் ரட்ச்லிப்பே உளவுத் துறை துளசி கப்பார்டு ,வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சுசி வைல்ச் உள்ளிட்ட 18 பேர் இடம் பெற்றிருந்தனர். SM என்ற பெயரில் ட்ரம்பும் இந்த குழுவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், தவறுதலாக, அட்லாண்டிக் பத்திரிகையின் ஆசிரியர்  Jeffrey Goldberg ம் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் குவிப்பு, எங்குத் தாக்குதல் நடத்தவேண்டும், போன்ற போர் வியூகங்கள், தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தனக்குத் தெரியும் என்று Jeffrey Goldberg கூறியுள்ளார்.

இந்நிலையில், தவறுதலாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ள பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் Brian Hughes,பிரைன் ஹுக்ஸ்,  எந்த போர்த் திட்டங்களும் குழுவில் விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், வெளிநபர் ஒருவர்  இந்த குழுவில் இணைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, Jeffrey Goldbergயை  இந்த குழுவில் சேர்த்ததாகக் கூறப்படும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், அட்லாண்டிக் இதழைத் தான் படிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மீறல் என்று குற்றம் சாட்டியுள்ள ஜனநாயக கட்சியினர்  இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க சிக்னல் போன்ற செயலியைப்  பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு அதிர்ச்சியூட்டும் ஆபத்தாக முடியலாம் என்றும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: americausadonald trump 2025Trump has a new headache?: Shock as war plan against Yemen leaked!
ShareTweetSendShare
Previous Post

பிற நாடுகளில் எம்பிக்கள் ஊதியம் : இந்திய எம்பிக்கள் ஊதியம் உயர்வு ஏன்?

Next Post

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா : ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies