ஆந்திராவில் மூளைச்சாவடைந்த பெண்ணின் இதயத்தைத் தனது சொந்த செலவில் தனி விமானத்தின் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைத்த அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குண்டூரைச் சேர்ந்த சுஷ்மா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூளைச்சாவடைந்தார்.
தொடர்ந்து பெண்ணின் இதயத்தைத் தனி விமானத்தில் தனது சொந்த செலவில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.