ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.