பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டணம் குறைக்கப்படுமென்ற அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 10 லட்ச ரூபாய் வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.