நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனக் கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் விண்ணப்பித்துப் பெற பிரத்யேக இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து, சரக்கு வாகனங்கள், நீலகிரி பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.