டெல்லியில் உள்ள நொய்டாவில் பிரபல யூடியூபர் மிருதுல் திவாரிக்குச் சொந்தமான லம்போர்கினி கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் தீபக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று நொய்டாவின் செக்டார் 94 சாலையில் சென்ற சிவப்பு நிற லம்போர்கினி கார், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.