சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பக்காளியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உடல் எடை குறைப்பு நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்த நிலையில், திருச்செங்கோடு பிரிவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ராஜேந்திரனை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயங்களைச் சேகரித்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.