பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி ஆராட்டு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவிற்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.