கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பி பகுதியில் விஜயலட்சுமி என்பவர் கணவர் மற்றும் 2 மாற்றுத்திறன் மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், 2 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகன்களுடன் விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.