தமிழகச் சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல் ஸ்டாலின் மன்றமாக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள அவர், திமுகவினர் நடத்தும் நாடகங்களுக்கு மேடையாகச் சட்டமன்றம் மாறியுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ள உதயகுமார், மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் துரோகம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.