தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி
Jul 24, 2025, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Apr 6, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை தாங்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ளபோதும்,  சிலர் நிதி வேண்டும் நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்தார்.  மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குறிப்பாக, வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், விழுப்புரம் – புதுவை, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சை வழித்தடத்தில் முடிவுற்ற 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அன்பு சொந்தங்களே எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,  காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருந்தாலும் சிலர் தமிழகத்திற்கு நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாக விமர்சித்தார். 2014ம் ஆண்டு தமிழகத்திற்கு 900 கோடி ரூபாயாக இருந்த ரயில்வே திட்ட நிதி தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் இதுவரை 3 ஆயிரத்து 700 மீனவர்களுக்கு மேல் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இது பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பூமி. ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் மூலம் இணைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திலிருந்து தனக்கு வரும் கடிதங்களில் கையொப்பம் கூட தமிழில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டார். தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கல்வியை தமிழில் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழியும், தமிழ் மரபும் உலகெங்கும் சென்று சேர வேண்டும் எனக் கூறிய பிரதமர், பாஜகவின் நிறுவன நாளில் சக்தி படைத்த பாரதம் என்ற லட்சியத்தை மனதில் தாங்கி பயணிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: Tamilராமேஸ்வரம்Those who speak Tamildon't even sign in Tamil: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

இலங்கையில் ரயில் கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies