தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை தாங்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ளபோதும்,  சிலர் நிதி வேண்டும் நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்தார்.  மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குறிப்பாக, வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், விழுப்புரம் – புதுவை, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சை வழித்தடத்தில் முடிவுற்ற 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அன்பு சொந்தங்களே எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,  காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருந்தாலும் சிலர் தமிழகத்திற்கு நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாக விமர்சித்தார். 2014ம் ஆண்டு தமிழகத்திற்கு 900 கோடி ரூபாயாக இருந்த ரயில்வே திட்ட நிதி தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் இதுவரை 3 ஆயிரத்து 700 மீனவர்களுக்கு மேல் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இது பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பூமி. ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் மூலம் இணைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திலிருந்து தனக்கு வரும் கடிதங்களில் கையொப்பம் கூட தமிழில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டார். தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கல்வியை தமிழில் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழியும், தமிழ் மரபும் உலகெங்கும் சென்று சேர வேண்டும் எனக் கூறிய பிரதமர், பாஜகவின் நிறுவன நாளில் சக்தி படைத்த பாரதம் என்ற லட்சியத்தை மனதில் தாங்கி பயணிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: Tamilராமேஸ்வரம்Those who speak Tamildon't even sign in Tamil: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

இலங்கையில் ரயில் கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies