தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி
Jun 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை தாங்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ளபோதும்,  சிலர் நிதி வேண்டும் நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்தார்.  மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குறிப்பாக, வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், விழுப்புரம் – புதுவை, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சை வழித்தடத்தில் முடிவுற்ற 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அன்பு சொந்தங்களே எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,  காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருந்தாலும் சிலர் தமிழகத்திற்கு நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாக விமர்சித்தார். 2014ம் ஆண்டு தமிழகத்திற்கு 900 கோடி ரூபாயாக இருந்த ரயில்வே திட்ட நிதி தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் இதுவரை 3 ஆயிரத்து 700 மீனவர்களுக்கு மேல் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இது பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பூமி. ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் மூலம் இணைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திலிருந்து தனக்கு வரும் கடிதங்களில் கையொப்பம் கூட தமிழில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டார். தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கல்வியை தமிழில் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழியும், தமிழ் மரபும் உலகெங்கும் சென்று சேர வேண்டும் எனக் கூறிய பிரதமர், பாஜகவின் நிறுவன நாளில் சக்தி படைத்த பாரதம் என்ற லட்சியத்தை மனதில் தாங்கி பயணிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: Tamilராமேஸ்வரம்Those who speak Tamildon't even sign in Tamil: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

இலங்கையில் ரயில் கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies