பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்காதது ஒரு வரலாற்று தவறு - தமிழிசை சௌந்தரராஜன் 
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்காதது ஒரு வரலாற்று தவறு – தமிழிசை சௌந்தரராஜன் 

Murugesan M by Murugesan M
Apr 7, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேசிய ஜனநாயக கூட்டணியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி பங்கீடு குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை ஒப்புக்கொள்ளப் பயந்து பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டிக்குச் சென்று ஓய்வெடுத்த சமயத்தில், ராமேஸ்வரத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி பணிகளைப் பிரதமர் மோடி துவக்கி வைத்திருப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராமேஸ்வரம் மீனவர்களின் நலன் காக்கச் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகவும், இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என்ற உத்தரவாதத்தையும் அவர் பெற்று வந்துள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சாதனையை நிகழ்த்திவிட்டு தமிழகம் வந்த பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் சந்தித்து வரவேற்காமல் இருந்தது ஒரு வரலாற்றுத் தவறு எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமரை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விமர்சிப்பது தேர்தல் சமயத்தில் அறிவாலயம் வாயிலில் நின்று,  ஒருசில எம்.பி இடங்களை பெறுவதற்கான அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, இந்தியாவில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி மிக உயர்ந்திருப்பதாகப் பெருமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற நல்லெண்ணம் மற்றும் ஆதரவுதான் அதற்குக் காரணம் என்பதைக் கூற மறந்துவிடுவதாகத் தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், இந்த மண்ணை அப்துல் கலாமின் ஆன்மிக பிறப்பிடம் என்று பாராட்டிய பிரதமருக்கு நன்றி சோல்ல மறக்கும் இந்த அரசு உண்மையில் ஒரு இருண்ட ஆட்சி என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Tags: tn bjpChief Minister Stalin's failure to welcome the Prime Minister was a historical mistake - Tamilisai SoundararajanPM ModiMK Stalin
ShareTweetSendShare
Previous Post

வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம்!

Next Post

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2-ஆக உயர்வு : மத்திய அரசு

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies