கும்பகோணத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் நாகூர் சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவாணி. இவர் கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள விடுதியில் தங்கி தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சத்தியவாணி கல்லூரிக்கு வராததால் சக மாணவிகள் விடுதிக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு சத்தியவாணியின் தாய் உயிரிழந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவி விபரீத முடிவை எடுத்ததற்கு மன அழுத்தம் காரணமா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.