மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், குமரி அனந்தன் மறைவையொட்டி இரங்கல் தீர்மானத்தைப் பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதனைத் தொடர்ந்து, பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.