உத்தரப்பிரதேசத்தில் ஒற்றை யானை சாலையோர கடையில் இருந்த அரிசி மாவை உட்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அம்மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் உள்ள சந்தைப் பகுதியில் புகுந்த ஒற்றை யானை, சாலையோர கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மாவினை உட்கொண்டது.
பின்னர் யாரையும் தொந்தரவு செய்யாமல் காட்டுப்பகுதிக்குச் சென்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.