விருதுநகரில் உள்ள மதுபான பாரில் அதிகாலை மது விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
விருதுநகர் – மதுரை சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதற்கு அருகாமையில் இயங்கும் பாரில் காலை 6 மணி முதலே அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதை அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாங்கிச்செல்லும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.