விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி காங்கிரசைச் சேர்ந்த பரமசிவன், திமுகவைச் சேர்ந்த குட்டி கணேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் என 5 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார்.