நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குளிச்சோலை பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை மற்றும் கறுஞ்சிறுத்தை உலா வந்துள்ளது.
இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கூண்டு வைத்துப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.