திண்டிவனம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை காட்டுக்குளம் பகுதியை நெருங்கியபோது, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சதீஷ்குமார், சைலஷ்குமார், ஸ்டாலின், சரோப் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.