தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை - ஆர்வம் காட்டும் மக்கள்!
Sep 19, 2025, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை – ஆர்வம் காட்டும் மக்கள்!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 09:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் கால வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் பனைமர நுங்கை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் களைக்கட்டும் நுங்கு விற்பனை குறித்தும் அதனால் கிடைக்கும் பலன் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்வதையே தவிர்க்கும் பொதுமக்கள் தவிர்க்க முடியாத பயணத்தின் போது குளிர்பானங்களை அருந்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பொதுமக்களின் தாகத்தைத் தீர்ப்பதோடு அவர்களின் உடலுக்கு எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் அருமருந்தாக பனைமர நுங்கு அமைந்திருக்கிறது. அடிப்படையிலேயே மருத்துவக் குணம் நிறைந்த நுங்கை உட்கொண்டால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு வயிற்று வலி, குடல் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் திகழ்கிறது

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலில் ஏற்படும் சூட்டைத் தணிக்க இயற்கை கொடுத்த வரமாக எண்ணி பனைமர நுங்கை ஏராளமான பொதுமக்கள் வாங்கி ருசித்து வருகின்றனர்.

சேலம் மாநகரத்து மக்கள் மத்தியில் பனைமர நுங்கிற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால், ஓமலூர், வாழைப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல் என பல்வேறு பகுதிகளிலிருந்து நுங்கு சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பனைமரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அதன் விளைச்சல் குறைந்து வந்தாலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் வாங்கி உண்ணும் உணவுப்பட்டியல் பனைமர நுங்கு தவிர்க்க முடியாத உணவாக உருவெடுத்திருக்கிறது.

Tags: Thirst-quenching drink: Weeding sales - people showing interestநுங்குதமிழகத்தில் கோடைக் காலம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா உதவியுடன் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

Next Post

மருத்துவர் சுந்தரராஜன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies