ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 15, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போது ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்து அதை அனைவரையும் உச்சரிக்கக் கோரியதற்கு ஹிந்து விரோத தீய சக்திகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆளுநர்  கலந்துகொண்டது கம்பன் விழாவில் கம்பராமாயணத்தின் நாயகன் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் பிறகு அந்நிகழ்ச்சியில் ராம நாமத்தை உச்சரிக்காமல் வேறு என்ன பெயரை உச்சரிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அல்லேலூயா என கோஷமிட்ட போது அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்ததற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என தெரிவித்துள்ளார்

இந்திய அரசியல் சாசனத்தின் ஆலயமாக விளங்கும் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்து அரசியல் சாசன நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்த ஈவெராவின் பெயரைக்கூறி பெரியார் வாழ்க என கோஷமிட்ட இறையாண்மைக்கு விரோதமான செயலில்டி திராவிட மாடல் கும்பல் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று ஜெய் ஸ்ரீராம் என்கிற ராம நாமத்தை கேட்ட உடன் பதட்டத்தில் பிதற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என உதாரண புருஷராக விளங்கிய உலக ஹிந்துக்களின் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமபிரானின் பெயரை ஆளுநர் ஆர்.என்.ரவி  உச்சரிக்கும் போது திராவிட மாடல் என்கிற பெயரால் கலாச்சாரத்தை சீரழித்த கூட்டத்திற்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீராமனின் பெயர் கொண்ட M.G.ராமச்சந்திரன் அவர்களால் இந்த திராவிட மாடல் கும்பல் 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் இருந்தது பிரபு ஸ்ரீராமச்சந்திரனின் பெயரை ஆளுநர் உச்சரித்த உடன் நினைவுக்கு வருகிறது போல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

Tags: DMKh rajaJai Sriramtamilnadu governor rn ravijai sriram issue
ShareTweetSendShare
Previous Post

சம காலத்திற்கு பொருந்தாத 1500 சட்டங்களை தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி – எல்.முருகன் பேச்சு!

Next Post

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிப்பு – பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies