மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள மூவேந்தர் நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக அமைந்திருக்கிறது இந்த உலக்கை தயாரிக்கும் தொழில். மூன்று தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக உலக்கை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் தெருவாகக் காட்சியளிப்பதால் இத்தெருவின் பெயரே உலக்கை தெரு என மாற்றப்பட்டுள்ளது.

கருவேல், வேங்கை, சிலை மரம், செலவகை, நாட்டுக் கருவேலமரம் என பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உலக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வந்தது.

தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மரங்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உறுதித் தன்மையைப் பலமுறை ஆய்வு செய்து, மெருகேற்றிய பின்னரே இந்த உலக்கைகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. காலப்போக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நவீன அரவை இயந்திரங்களின் வருகையால் உலக்கைகளின் பயன்பாடு அடியோடு சரியத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் திருவிழாக்களில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டும் இந்த உலக்கைகளை விரும்பி வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

திருமண விழாக்களின் போதும் இறப்பு வீடுகளில் சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாக உலக்கை மாறிவிட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த உலக்கை தயாரிப்பு தொழிலைப் பாதுகாக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுவதைப் போல வங்கிக்கடன், சலுகை விலையில் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலக்கை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உலக்கை உற்பத்தி தொழில்Tn newsTamil Janam newsதமிழக அரசுThe mouse-losing plunger manufacturing industry: Will the Tamil Nadu government help?
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

Next Post

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு : அண்ணாமலை விமர்சனம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies