மியான்மர் நிவாரண பணிகளை முடக்க சதி : IAF விமானம் மீது சைபர் தாக்குதல்!
Nov 2, 2025, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மியான்மர் நிவாரண பணிகளை முடக்க சதி : IAF விமானம் மீது சைபர் தாக்குதல்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டது யார் ?  இந்த சவாலை, இந்திய விமானப் படை விமானிகள் எப்படிச் சமாளித்தார்கள் ?  என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த மார்ச் மாதம், மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக, ஆபரேஷன் பிரம்மாவை இந்தியா தொடங்கியது.  தேடல் மற்றும் மீட்புப் பணிகளுடன், மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை இந்தியா வழங்கத் தொடங்கியது.

மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பேரிடர் நிவாரண பொருட்களை வழங்கவும் சுமார் ஆறு IAF விமானங்களிலும்,  ஐந்து இந்தியக் கடற்படைக் கப்பல்களிலும் மொத்தம் 625 மெட்ரிக் டன் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் C-130J விமானம்,  ஜிபிஎஸ்-ஸ்பூஃபிங் (GPS spoofing) என்ற சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் (GPS spoofing) என்பது ஒரு வகையான சைபர் தாக்குதலாகும். இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களை தவறாக வழிநடத்த ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையான செயற்கைக்கோள் தரவை மீறி, போலியான பொய்யான சிக்கனல்களை அனுப்பி, விமானியைக் குழப்புவதாகும். இந்த தாக்குதல்கள், விமானத்தின் சரியாகச் செல்லும் திறனை முடக்கி விடும். அதனால்,    விமானம் வழி மாறி செல்லத் தொடங்கும்.  இதனால்,பெரும் விபத்து ஏற்படுவதற்கும்  வாய்ப்பிருக்கிறது.

உலகம் முழுவதும், ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற ராணுவ பதற்றமுள்ள பகுதிகளில் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் (GPS spoofing) தாக்குதல் அதிகரித்துள்ளது.

காசா போரில், இஸ்ரேல் இராணுவம்  ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்கைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதுபோல, உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவும் அதிக அளவில்  ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்கை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில், குறிப்பாக,பஞ்சாப் மற்றும் ஜம்முவில், கடந்த காலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட GPS  spoofing தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், மியான்மர் மீது பறக்கும் போது இந்திய விமானப்படையின் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தின் மீது இந்த GPS  spoofing தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

GPS  spoofing சீனாவால் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. என்றாலும், இந்திய விமானப் படை தரப்பில் இருந்து, யாரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டது என்று தெரிவிக்கப் படவில்லை.

இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் விமானிகளுக்குப் பொய்யான தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசரக் கால சிக்னல்களை பயன்படுத்தி, உண்மை என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக, பயணத்தின் போக்கைப் பராமரிக்கவும் விமானப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய விமானப்படை  விமானிகள் விரைவாகச் செயல்பட்டனர். விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு C-130J  விமானிகள் மாறினர். சற்றும் எதிர்பாராத சவாலான சூழலைத்  திறம்படச் சமாளித்தனர். மிகப் பெரிய சைபர் தாக்குதலை  இந்திய விமானப்படை விமானிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே கோகோ தீவுகள் அமைந்துள்ளன. நீண்ட தூர மின்னணு போர் அமைப்புகள் இத் தீவுகளில் அமைக்கப்பட்டிருந்தால், அவை,   மியான்மரின் வான்வெளியில் சைபர் தாக்குதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.

நீண்ட காலமாகவே  சிக்னல்கள் புலனாய்வு (SIGINT) மற்றும் ரேடார் வசதிகள் இந்த தீவுகளில் இருப்பதாக உலக அளவில் சந்தேகம் இருந்து வருகிறது.

இப்போது, இந்திய விமானப்படை விமானம்  C-130J  மீது நடந்த சைபர் தாக்குதலுக்கும், கோகோ தீவுகள் உள்ளதாகக் கூறப்படும், மின்னணு போர் உள்கட்டமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags: மியான்மர்Cyber ​​attack on IAF plane: Myanmar plot to halt relief effortsIAF விமானம் மீது சைபர் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : தோகையை விரித்தாடிய மயில்கள் – பொதுமக்கள் கண்டு ரசிப்பு!

Next Post

தூத்துக்குடி : ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies