அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியதையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து யாத்ரீகர்கள் பதிவு செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரைக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால் ஏராளமான யாத்ரீகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.