புதுக்கோட்டை மாவட்டம், ஈழக்குடிபட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், பெரிய மாடுகளுக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாடுகளுக்கு 9 கிலோ மீட்டர் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
போட்டி தொடங்கியதும் எல்லைக் கோட்டை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைச் சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.