மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி - தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!
Jul 30, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

Manikandan by Manikandan
Jan 17, 2026, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி வென்று வரலாறு படைத்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு வியாழக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பாஜக மற்றும் துணை முதலமைச்ர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

மாநகராட்சி தேர்தல் முடிவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மும்பையை கைப்பற்றியது.

மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 114 இடங்களை கடந்து மொத்தமாக 118 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை மாநகராட்சியில், 30 ஆண்டுகளாக நீடித்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, வெளியான தேர்தல் இறுதி முடிவுகளின்படி, மும்பை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 89 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வென்றுள்ளது. அதேபோல, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 29 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

அதேபோல, காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும், ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசியவாத காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம், சமாஜ்வாதி உள்ளிட்ட மற்ற கட்சிகள் மொத்தமாக 14 இடங்களில் வென்றுள்ளன.

 

 

Tags: maharastra electionUddhav ThackeraymumbaibjpElectionCongressMaharastraEknath Shinde
ShareTweetSendShare
Previous Post

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

Next Post

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies