கோவை கணபதியில் உள்ள வணிக வளாகத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குத் திரையிடப்பட்டுள்ள ஜாட் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஜாட் படம் திரையிடப்பட்டால் திரையை கிழிப்போம் எனவும் அவர்கள் எச்சரித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாதகவினரை வணிக வளாக பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.