வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போா் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததது.
சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது.
உக்ரைன், ரஷ்யா மற்றும் காசா, இஸ்ரேல் போா் அளவுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துவரும் சூடான் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையெனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போருக்கு அஞ்சி அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புலம் பெயர்ந்துள்ளனர்.