பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி : வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!
Mar 15, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி : வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது.  இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு மதத்தவர்களுக்கும் தனித்தனி உரிமையியல் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்து மதத்தவர்களுக்காக தனிச் சட்டம் உள்ளது. பழங்குடியினருக்கென்று தனிச் சட்டங்கள் உள்ளன.

சீக்கியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக எந்நேரமும் கத்தி வைத்திருப்பதற்கும், இராணுவம், காவல் துறையில் பணிபுரிந்தாலும்,பணி விதிகளுக்கு மாறாகத் தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் தனிச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இஸ்லாமியர் பின்பற்றும் ஷரியத் சட்டமே, 1937ம் ஆண்டு முஸ்லீம் தனிநபர் சட்டமானது.

இப்படி சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது, நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே , அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து மதம்,மொழி,இனம் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களே பொது சிவில் சட்டமாகும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் சாசனத்தின் 44வது சட்டப் பிரிவும் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது.  இதன்படி,நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பொது சிவில் சட்டம்  பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதைச் சட்டமாக நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்,பொது சிவில் சட்டம் குறித்தும் தெரிவித்திருந்தார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சட்டங்கள் மதவாதம் சார்ந்ததாக இருக்கின்றன என்று பெரும்பான்மையான மக்கள் நம்புவதாகக் கூறிய பிரதமர் மோடி, நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்கள் மத ரீதியாக நாட்டைப் பிளவு படுத்துகின்றன என்றும் கூறியிருந்தார்.

எனவே, மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது இந்தியர்களின் கடமை என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் நடந்தது. நிறைவு நாளில்,  பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி,  நாட்டில் மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த சூழலில், விடுதலைக்குப் பின் நாட்டின் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. தனது மூன்றாவது ஆட்சிக்காலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்த பிரதமர் மோடி, வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

வக்ஃப் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த நிலையில், பிரதமர் மோடி, அடுத்ததாக பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.  கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஹரியானாவில் அம்பேத்கார் பிறந்தநாள் பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டம் கூறும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பதையே தான் மதச் சார்பற்ற சிவில் சட்டம் என்று குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதனைக் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அதிரடியாக பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, 23வது சட்ட ஆணையத்துக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. ​​7 மாதங்களுக்குப் பிறகு, இப்போது மத்திய அரசு,ஆணையத்தின்  தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

23வது சட்ட ஆணையத்தின் தலைவராக  ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாக வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் மற்றும் பேராசிரியர் டி.பி. வீரம்  இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

வரும் வாரங்களில் பல்வேறு சமூக மற்றும் மதக் குழுக்களுடன் ஆணையம் ஆலோசனைகளைப் பெறத்   தொடங்கும் என்றும், பொது சிவில் சட்டத்தின் நன்மைகள் குறித்த பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடங்க அரசு  திட்டமிட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

Tags: PM Modiபிரதமர் மோடிPrime Minister Modi's next move: General Civil Code is following the Waqf Act!வக்ஃபு சட்டம்
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே தர்மராஜா கோயில் பல்லக்கு உற்சவம்!

Next Post

மியான்மர் : புத்தாண்டை ஒட்டி 4,900 சிறை கைதிகள் விடுதலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies