மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு 4 ஆயிரத்து 900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் ராணுவ அரசின் இடைக்கால தலைவரான மின் அவுங் ஹ்லைங், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
இதனையடுத்து தலைநகர் யாங்கோனிலுள்ள இன்செயின் சிறைச்சாலையிலிருந்து 19 பேருந்துகள் மூலம் சிறைக் கைதிகள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவின்படி 13 வெளிநாட்டவரும் விடுதலையாகவுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.