சென்னை, நுங்கம்பாக்கத்தில் கனரக லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரவாயலில் இருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று வேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்கள் இன்றி ஓட்டுநர் உயிர்தப்பிய நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் விபத்து குறித்து அறிந்த போக்குவரத்து காவல்துறையினர், சிஎம்ஆர்எல் அதிகாரிகளுடன் இணைந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரியை அப்புறப்படுத்திய அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
கடுமையான போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.