சென்னை மாநகராட்சி புதிய முயற்சி : கட்டிட கழிவுகளிலிருந்து மணல் உற்பத்தி!
Jul 4, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சி புதிய முயற்சி : கட்டிட கழிவுகளிலிருந்து மணல் உற்பத்தி!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் முதன்முறையாகக் கட்டட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி அடிப்படையில் மணல் உற்பத்தி செய்யும் நடைமுறையைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஐஐடி அங்கீகாரத்துடன் கட்டடக் கழிவுகளில் இருந்து மணல் தயாரிக்கும் முறை குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் லோடு மணல் தேவை இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கணக்கிடும் போது சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவைப்படும் எனக் கூறப்படும் நிலையில், ஆற்று மணலை எடுக்கப் பல்வேறு சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதால் மணல் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. ஆற்று மணலுக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட எம்சாண்ட் மணலும் போதுமான பயனளிக்காத நிலையில் அதற்கு மாற்று மணல் தயாரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முதற்கட்டமாக இறங்கியுள்ளது.

ப்ரீத்… வீடுகள் பழுதுபார்ப்பு, ஓடுகள், அலமாரிகள், உடைந்த பீங்கான்கள், சானிட்டரி பொருட்களைக் கட்டணமின்றி வசூலிக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

குடியிருப்புவாசிகள் தங்களின் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை அகற்றுவதற்கு 1913 என்ற உதவி எண் மூலமாகவும், மாநகராட்சியின் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து சேவையைப் பெறலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அவ்வாறு பெறப்படும் கழிவுகள் கொடுங்கையூர் அல்லது பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் எனவும், அதற்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து முதல் 3 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்படும் இந்த மணல் ஆற்று மணலை விட விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மணலுக்கான அங்கீகாரத்தை சென்னை ஐஐடி வழங்கியிருக்கும் நிலையில், விமான நிலையம், எல் & டி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமானக் கழிவுகளைச் சாலையோரங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதோடு, குறைந்த செலவில் தரமான மணலை உருவாக்கும் இந்த மறுசுழற்சி முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: சென்னை மாநகராட்சிChennai Corporation's new initiative: sand production from construction waste
ShareTweetSendShare
Previous Post

 நெசவாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Next Post

நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை – பேரவையில் அமைச்சர் ஆதங்கம்!

Related News

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies