பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க வலியுறுத்திக் கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, தமிழக அமைச்சரவையில் பொன்முடியை வைத்திருப்பது, அக்கட்சிக்கும், தமிழக அரசுக்கும் அவபெயரை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
பிறர் மனங்களை நோகடிக்கும் வகையில் பேசும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.