புது வகையான 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A என்ற எழுத்து இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளது.