தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரிய காடம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் அர்ச்சனை சீட்டு விநியோகிக்கும் பணியாளரான இவர், பாம்புகளைப் பிடிப்பதிலும் கை தேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் இருந்த பாம்பைப் பிடிக்கச் சென்ற சிவப்பிரகாசத்தை, பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து அந்தப் பாம்பை ஒரு பையில் போட்டுக் கட்டி வைத்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்தார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில், வனத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்துச் சென்றனர்.