அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் விசாரித்தனர்.
மேலும் டாஸ்மாக், தமிழக அரசு, அமலாக்கத்துறை என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவுள்ளது.