பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர்.
பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதமான கால சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறையின் அறிவிப்பால் விரைவில் பயங்கரவாதிகள் பிடிபடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.