காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முதல்கட்டமாக காஷ்மீரில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 19 பேர் சென்னை திரும்பினர். இதன் தொடர்ச்சியாக, மேலும் 50 பேர் ஹைதராபாத் வழியாக சென்னை வந்தடைந்தனர்.
விமான நிலையம் வந்த அவர்களை, அதிகாரிகள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.