டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூதரகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை போலீசார் அகற்றினர்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்ட நிலையில் டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.