விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!
Jul 23, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான விவசாயங்களில் ஒன்றாக விரிச்சிப் பூ சாகுபடி திகழ்ந்து வருகிறது. சுமார் 400க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குமாரா வயலூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்ட வேர்ப்பூச்சி தாக்குதல், அடுத்தடுத்த நிலத்திற்கும் பரவி ஏராளாமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூ சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

திருச்சியில் எட்டரை, அந்தநல்லூர், கோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த விரிச்சிப் பூ மாலை கட்டுவதற்கும், கோவில் திருவிழா காலங்களில் அலங்காரப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரை ஏற்றுமதி செய்யப்படும் இந்த விரிச்சிப் பூவில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பயிரிடப்பட்ட மூன்று மாதங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 கிலோ அளவிற்குப் பூக்களைத் தரும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் வேர்ப்பூச்சி தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக இருக்கும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டும் பூச்சித் தாக்குதல் குறித்தோ, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ தோட்டக்கலைத்துறை எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.

விரிச்சிப் பூ சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து சாகுபடியை பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: விவசாயிகள்Rootworm attack on Virichipoo plants: Farmers in a state of shockவேர் பூச்சி தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு : துரைமுருகன் விடுவிப்பு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies