விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!
Mar 18, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான விவசாயங்களில் ஒன்றாக விரிச்சிப் பூ சாகுபடி திகழ்ந்து வருகிறது. சுமார் 400க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குமாரா வயலூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்ட வேர்ப்பூச்சி தாக்குதல், அடுத்தடுத்த நிலத்திற்கும் பரவி ஏராளாமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூ சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

திருச்சியில் எட்டரை, அந்தநல்லூர், கோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த விரிச்சிப் பூ மாலை கட்டுவதற்கும், கோவில் திருவிழா காலங்களில் அலங்காரப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரை ஏற்றுமதி செய்யப்படும் இந்த விரிச்சிப் பூவில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பயிரிடப்பட்ட மூன்று மாதங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 கிலோ அளவிற்குப் பூக்களைத் தரும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் வேர்ப்பூச்சி தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக இருக்கும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டும் பூச்சித் தாக்குதல் குறித்தோ, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ தோட்டக்கலைத்துறை எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.

விரிச்சிப் பூ சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து சாகுபடியை பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: விவசாயிகள்Rootworm attack on Virichipoo plants: Farmers in a state of shockவேர் பூச்சி தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு : துரைமுருகன் விடுவிப்பு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

Related News

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies