விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!
Aug 6, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரிச்சி பூ செடிகளில் வேர் பூச்சி தாக்குதல் : நிலைகுலைந்த விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சியின் பிரதான சாகுபடிகளில் ஒன்றான விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான விவசாயங்களில் ஒன்றாக விரிச்சிப் பூ சாகுபடி திகழ்ந்து வருகிறது. சுமார் 400க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குமாரா வயலூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்ட வேர்ப்பூச்சி தாக்குதல், அடுத்தடுத்த நிலத்திற்கும் பரவி ஏராளாமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூ சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

திருச்சியில் எட்டரை, அந்தநல்லூர், கோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த விரிச்சிப் பூ மாலை கட்டுவதற்கும், கோவில் திருவிழா காலங்களில் அலங்காரப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வரை ஏற்றுமதி செய்யப்படும் இந்த விரிச்சிப் பூவில் ஏற்பட்டிருக்கும் வேர்ப்பூச்சி தாக்குதல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.

பயிரிடப்பட்ட மூன்று மாதங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 கிலோ அளவிற்குப் பூக்களைத் தரும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் வேர்ப்பூச்சி தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக இருக்கும் இந்த விரிச்சிப் பூ செடிகளில் ஏற்பட்டும் பூச்சித் தாக்குதல் குறித்தோ, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ தோட்டக்கலைத்துறை எந்தவித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே தற்போதைய பாதிப்புக்குக் காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் அதிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இது போன்ற பூச்சித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.

விரிச்சிப் பூ சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை இழப்பீடு வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து சாகுபடியை பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: விவசாயிகள்Rootworm attack on Virichipoo plants: Farmers in a state of shockவேர் பூச்சி தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு : துரைமுருகன் விடுவிப்பு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies