பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது தொடர்பாக பேசிய அவர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்தை எதிர்த்து பாகிஸ்தான் உலக வங்கியிடம் முறையிட்டால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனகூறினார்.
இந்தியா மேற்கொள்ள உள்ள 3 திட்டங்களால் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது எனவும் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். நீண்ட கால திட்டமாக அணைகளில் துார்வார முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் புதிய நீர் மின் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்க இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாகவும் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.