தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், திமுக எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார், மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல், தேனியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுக உறுப்பினர்கள் மீது உத்தமபாளையம் போலீசாரும்,
அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார் மீது நிலக்கோட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.