எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 4-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், 3-வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி துட்மாரி காலி, ராம்பூர் உள்ளிட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.