இந்திய நாட்டிற்குள் பல்வேறு காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற இன்று வரையும், மருத்துவ தேவைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29-ம் தேதி வரையும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வாகா எல்லையில் ஏராளமான பாகிஸ்தானியர்கள், வாகனங்களில் அணிவகுத்து நின்றனர். வாகா – அட்டாரி எல்லை வழியாக அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி வருகின்றனர்.