உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!
Jul 13, 2025, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கட்டுமஸ்தான உடலைப் பெற யாருக்குத்தான் பிடிக்காது. முன்பு, ஓடி ஆடி உடலைச் சீராக வைத்திருந்தவர்கள், இன்றைய நவநாகரீக காலத்தில் தேடுவது உடற்பயிற்சிக் கூடங்களைத் தான். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தரப்பினர் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடினாலும், மற்றொரு தரப்பினர் சிக்ஸ் பேக், ஃபிட்டான கட்டுமஸ்தான உடல் தோற்றத்திற்காக உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடுகின்றனர்.

இதனால் உணவகங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகளைப்போன்று உடற்பயிற்சி நிலையங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியைச் சமாளித்து தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில உடற்பயிற்சி நிறுவனங்கள் குறுக்கு வழியைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கார் ஒன்றில் உரிய அனுமதி இன்றி கொண்டு வரப்பட்ட ஊக்க மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த ஊக்க மருந்துகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பனை செய்வதற்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

சமீபகாலமாக இந்த ஊக்க மருந்து பழக்கம் உடற்பயிற்சி கூடங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கின்றனர் உடற்பயிற்சியாளர்கள். இந்த மருந்துகளை பயன்படுத்தும்போது மூளை தடுமாற்றம் அடைந்து தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பயன்படுத்தப்படும் இதுபோன்ற ஊக்க மருந்துகளால், மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும் இதுபோன்ற மருந்துகளை மனித உடல்களில் செலுத்தினால் நாள்பட்ட நோய்கள் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்களில் இருந்து உடல்களைப் பாதுகாக்கவே உடற்பயிற்சி கூடங்களை நோக்கி வருவதாகக் கூறும் வாடிக்கையாளர்கள், உடற் பயிற்சிக்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பழக்க வழக்கம் இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடங்களில் பரவி வரும் இந்த ஊக்க மருந்து கலாச்சாரத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவை மாவட்டம்Is exercise a stimulant?: A request to protect the younger generationஉடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தாஉடற்பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Next Post

சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!

Related News

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

தைலாபுரம் தோட்டத்தில் தனியார் துப்பறியும் குழுவினர் சோதனை!

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies